Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது கிடையாது: டத்தோ அபாஹ்மி
தற்போதைய செய்திகள்

அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது கிடையாது: டத்தோ அபாஹ்மி

Share:

கோலாலம்பூர், செப்டம்ப்ர்.29-

மடானி அரசாங்கத்தில் தொடர்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில் தமது பதவியை ஒரு போதும் தவறாகப் பயன்படுத்தியது கிடையாது என்று டத்தோ ஃபாமி ஃபாட்சீல் இன்று மனம் திறந்தார்.

இதற்கு முன்பு ஓர் அரசாங்கப் பணியாளர் என்ற முறையில் பொதுச் சேவைத்துறையில் தமக்கு அனுபவம் இருந்த போதிலும் ஒரு மலேசியர் என்ற முறையில் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பு, கடமையை நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நிறைவேற்ற வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருந்து வருவதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

தாம் சார்ந்த அமைச்சு அல்லது தாம் தலைமையேற்ற நிகழ்வில் எந்தவொரு திட்டத்திலும் , குத்தகையிலும் ஒரு காசு கூட எடுத்ததில்லை என்றும், கமிஷன் பெற்றது கிடையாது என்றும் டத்தோ ஃபாமி தெரிவித்தார்.

இன்று ஆர்.டி.எம். அங்காசாபூரி, ஆடிடோரியம் ஶ்ரீ அங்காசாவில் செயற்கை நுண்ணறிவு மீதான 2025 ஆம் ஆண்டுக்கான 29 ஆவது பொதுச் சேவைத் துறையின் உளவியல் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அரசாங்கப் பேச்சாளரான டத்தோ ஃபாமி மேற்கண்டவாறு கூறினார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்