Mar 20, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது கிடையாது: டத்தோ அபாஹ்மி
தற்போதைய செய்திகள்

அமைச்சர் பதவியைத் தவறாகப் பயன்படுத்தியது கிடையாது: டத்தோ அபாஹ்மி

Share:

கோலாலம்பூர், செப்டம்ப்ர்.29-

மடானி அரசாங்கத்தில் தொடர்புத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் ஆன நிலையில் தமது பதவியை ஒரு போதும் தவறாகப் பயன்படுத்தியது கிடையாது என்று டத்தோ ஃபாமி ஃபாட்சீல் இன்று மனம் திறந்தார்.

இதற்கு முன்பு ஓர் அரசாங்கப் பணியாளர் என்ற முறையில் பொதுச் சேவைத்துறையில் தமக்கு அனுபவம் இருந்த போதிலும் ஒரு மலேசியர் என்ற முறையில் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்பு, கடமையை நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நிறைவேற்ற வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருந்து வருவதாக டத்தோ ஃபாமி குறிப்பிட்டார்.

தாம் சார்ந்த அமைச்சு அல்லது தாம் தலைமையேற்ற நிகழ்வில் எந்தவொரு திட்டத்திலும் , குத்தகையிலும் ஒரு காசு கூட எடுத்ததில்லை என்றும், கமிஷன் பெற்றது கிடையாது என்றும் டத்தோ ஃபாமி தெரிவித்தார்.

இன்று ஆர்.டி.எம். அங்காசாபூரி, ஆடிடோரியம் ஶ்ரீ அங்காசாவில் செயற்கை நுண்ணறிவு மீதான 2025 ஆம் ஆண்டுக்கான 29 ஆவது பொதுச் சேவைத் துறையின் உளவியல் கூட்டத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அரசாங்கப் பேச்சாளரான டத்தோ ஃபாமி மேற்கண்டவாறு கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து