ஆறு வயது மகனுக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்படும் அளவிற்கு அந்த சிறுவனை சித்ரவதை செய்து வந்ததாக நம்பப்படும் தந்தைக்கும், வளர்ப்புத் தாயாருக்கும் கோலபிலா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
27 வயது தந்தை முஹம்மது ஐசத் சோல்கேப்லி மற்றும் 31 வயது வளர்ப்புத் தாயார் சிதி நோர்ஷகினா முகமது நூர் ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சித்தி இஸ்மாயில் இத்தண்டனையை விதித்தார்.
அவ்விருவரும் கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நெகிரி செம்பிலான், பகாவ், ஜம்பூ லாபான் என்ற பொது குடியிருப்புப்பகுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவ்விரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


