ஆறு வயது மகனுக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்படும் அளவிற்கு அந்த சிறுவனை சித்ரவதை செய்து வந்ததாக நம்பப்படும் தந்தைக்கும், வளர்ப்புத் தாயாருக்கும் கோலபிலா செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.
27 வயது தந்தை முஹம்மது ஐசத் சோல்கேப்லி மற்றும் 31 வயது வளர்ப்புத் தாயார் சிதி நோர்ஷகினா முகமது நூர் ஆகிய இருவரும் தங்களுக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி சித்தி இஸ்மாயில் இத்தண்டனையை விதித்தார்.
அவ்விருவரும் கடந்த மார்ச் மாதம் முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நெகிரி செம்பிலான், பகாவ், ஜம்பூ லாபான் என்ற பொது குடியிருப்புப்பகுதியில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் வகையில் அவ்விரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி


