புத்ராஜெயா, ஜன.6-
லஞ்ச ஊழல் தொடர்பில் புகார் கிடைத்த 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.
புகார் அளித்தவர், எஸ்.பி.ஆர்.எம். நடவடிக்கையின் தன்மை குறித்து புகார் அளித்த தேதியிலிருந்து 28 நாட்களுக்குள் அறிந்து கொள்ள முடியும் என்று அஸாம் பாக்கி விளக்கினார்.
எஸ்.பி.ஆர்.எம். அண்மையில் அறிமுகப்படுத்திய சாசனத்தின் கீழ் நிர்ணயித்துள்ள 7 நடைமுறைகளில் இதுவும் ஒன்றாகும் என்று புத்ராஜெயாவில் நடைபெற்ற விளக்கமளிப்பு நிகழ்வில் அஸாம் பாக்கி இதனை தெரிவித்தார்








