May 21, 2026
Thisaigal NewsYouTube
காணாமல் போன இரு சகோதரர்களில் ஒருவர் மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

காணாமல் போன இரு சகோதரர்களில் ஒருவர் மீட்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர்,ஜன.17
சிலாங்கூர், ஜுலு பெர்னாம், தாமான் பெர்னாம் ஜெயா- வில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி காணாமல் போன இரு சகோதர்களில் ஒருவர் LRT Pasar Seni நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டார்.

17 க்கும் 16 க்கும் வயதிற்கு உட்பட்ட அவ்விருவரையும் யாரென்று தெரியாத நபர்கள் கடத்தி சென்று Jalan Petaling-கில் உள்ள ஓர் இடத்தில் அடைத்து வைக்கப்பட்டதாக 39 வயதுடைய தாயார் கூறினார்.

அவ்விருவரையும் ஜனவரி 9 ஆம் தேதி வரையில் தனிமையில் அடைக்கப்பட்டிருந்ததாகவும் பின்பு 17 வயதுடைய சகோதரன் தப்பித்து தொலைப்பேசியில் காவல்துறைக்கும் தாயாருக்கும் தொடர்பு கொண்டதாக விசாரணையில் நேற்று தெரியவந்துள்ளது.

பின் துன் எச்எஸ் லீ காவல்துறை அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்து அச்சிறுவனை காப்பாற்றியதுடன் சந்தேகிக்கும் நபரை கைது செய்ததாகவும், மேல் விசாரணைக்கு அச்சிறுவனை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்ததாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தனது மற்றொரு மகன் விரைவில் கண்டுப்பிடிக்கப்பட வேண்டும் என்று அப்பிள்ளைகளின் தாயார் கேட்டு கொண்டார்.

Related News