Mar 27, 2026
Thisaigal NewsYouTube
அந்த விவகாரத்தை ஆட்சியாளர்கள் முடிவு செய்வார்கள்
தற்போதைய செய்திகள்

அந்த விவகாரத்தை ஆட்சியாளர்கள் முடிவு செய்வார்கள்

Share:

ஷாங்காய், சீனா, செப்டம்பர் 12-

முஸ்லிம் அல்லாத உணவகங்களுக்கு Halal சான்றிதழை கட்டாயமாக்குவதா? இல்லையா? என்பது குறித்த கொள்கை அளவிலான எந்தவொரு முடிவும் ஆட்சியாளர்கள் மன்றம் முடிவு செய்யும் என்று துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

எனவே இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள அனைத்து தரப்பினரும் தற்போது தாங்கள் பாதிக்கப்பட்டு விட்டதாக உணர வேண்டிய அவசியமில்லை என்று அம்னோ தலைவருமான அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

அதேவேளையில் சர்ச்சைக்கு இடமாகியுள்ள இவ்விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் சற்று அமைதி காக்க வேண்டும் என்று தேசிய ஹலால் மன்றத்தின் தலைவருமான ஜாஹிட் வலியுறுத்தினார்.

உணவகங்கள் Halal சான்றிதழை கொண்டு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுவது ஒரு உத்தேச பரிந்துரையே தவிர அது அரசாங்கத்தின் கொள்கை அல்ல என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ள என்று துணைப்பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இந்த விவகாரத்தை ஆட்சியாளர் மன்றம் தனது அதிகாரத்திற்கு ஏற்ப முடிவு செய்யும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை