Mar 19, 2026
Thisaigal NewsYouTube
அம்பாங் பார்க் பகுதியில் ஒன்று கூட நாளை அனுமதி கிடையாது!
தற்போதைய செய்திகள்

அம்பாங் பார்க் பகுதியில் ஒன்று கூட நாளை அனுமதி கிடையாது!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.25-

47-வது ஆசியான் உச்சி மாநாட்டை முன்னிட்டு நாளை அம்பாங் பார்க்கில் எந்த ஒரு கூட்டத்தையும் நடத்த காவல்துறை அனுமதிக்காது என்று மாநகர காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் அமைதியாக ஒன்று கூடி தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமையை காவல்துறை முழுமையாக மதிக்கிறது என்று கூறியுள்ள அவர், ஆனால் அம்பாங் பார்க் பகுதி ரேட் ஸோன் ஆக அறிவிக்கப்பட்டுள்ளதால் அவ்விடத்தில் அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகளைக் கொண்ட InterContinental Hotel, அம்பாங் பார்க்கிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. எனவே, அந்த இடம் எந்த வகையான பொதுக் கூட்டத்திற்கும் பொருத்தமானதல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், டத்தாரான் மெர்டெக்கா அல்லது பாடாங் மெர்போக் போன்ற மாற்று இடங்களில் கூட்டத்தை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஃபாடில் மார்சுஸ் தெரிவித்துள்ளார்.

Related News

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி அவசியம் - உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

நாட்டில் இன விவகாரங்களுக்கு அமைதியான தீர்வு காணப்பட வேண்டும் / மலாய்–இந்திய அரசு சாரா அமைப்புகள் வலியுறுத்தல்

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

கெடா மாநிலத்தில் மார்ச் 23-ஆம் தேதி கூடுதல் அரசு விடுமுறை அறிவிப்பு

உடம்புப் பிடி தொழிலாளியை ஆயுதம் கொண்டு தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

உடம்புப் பிடி தொழிலாளியை ஆயுதம் கொண்டு தாக்கியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

எரிபொருள் தட்டுப்பாடு: தென் தாய்லாந்திற்குச் செல்வதைத் தவிர்க்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து

எரிபொருள் தட்டுப்பாடு: தென் தாய்லாந்திற்குச் செல்வதைத் தவிர்க்க மலேசியர்களுக்கு அறிவுறுத்து