Mar 11, 2026
Thisaigal NewsYouTube
“Anwar: The Untold Story” திரைப்படத்தை பார்க்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதா? கல்வி அமைச்சு மறுப்பு
தற்போதைய செய்திகள்

“Anwar: The Untold Story” திரைப்படத்தை பார்க்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளதா? கல்வி அமைச்சு மறுப்பு

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் “Anwar: The Untold Story”. திரைப்படத்தை ஆசிரியர்களும் மாணவர்களும் பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி கல்வி அமைச்சின் அனைத்து இலாகாக்களின் அதிகாரிகளுக்கும், மாநில கல்விப் பொறுப்பாளர்களுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி முதல்வர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவதைக் கல்வி அமைச்சு இன்று மறுத்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சர் ஃபட்லீனா சிடெக் கை மேற்கோள்காட்டி கல்வி தலைமை இயக்குநர் பிகாருதீன் கசாலி சுற்றறிக்கையின் வாயிலாக இப்படியொரு உத்தரவை பிறப்பித்துள்ளார் என்று கூறப்படுவதை கல்வி அமைச்சு மறுத்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த கடிதம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை அல்ல என்றும் அந்த கடிதத்தின் உண்மைத் தன்மையை ஆராயும்படியும் அது கேட்டுக்கொண்டுள்ளது.

பிரதமர் அன்வாரின் வாழ்க்கை சரிவுகளையும், ஏற்றங்களையும் சித்தரிக்கும் “Anwar: The Untold Story” திரைப்படம் குறித்து மாணவர்களுக்கு விளக்குவதற்கு கல்வி அமைச்சுப் பணியாளர்கள் அந்தப் படத்தை கட்டாயமாக பார்க்க வேண்டும் என்பதுடன் ஆசிரியர்களும், மாணவர்களும் அந்த திரைப்படத்தை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி ஓர் உத்தரவிடப்பட்டு .இருப்தைப் போல் அந்த கடிதத்தின் ள்ளடக்கம் சித்தரிக்கப்பட்டு இருந்தது..

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு