ஜொகூர் பாரு,ஜன.11
ஜொகூர் பாருவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவு போக்குவரத்து அமைப்பு (RTS) 2026 ஆம் ஆண்டு டிசம்பரில் திட்டமிட்டப்படி திறக்கப்படும் என்று எம்.ஆர்.டி சேவையை நிர்வகித்து வரும் Mass Rapid Transit Corporation Sdn Bhd கூறுகிறது.
இரு நாடுகளின் கடல் வழித்தடத்தை ஒன்றாக கொண்டு வரும் ஆர்.டி.எஸ் இணைப்பு திட்டம் இடைவெளியை நிறைவு செய்யும் ஒரு முக்கிய தருணமாக கருதப்படுவதாக MRT Corp CEO, முஹமாட் சாரிஃப் ஹஷிம் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
4 கிலோமீட்டர் ஆர்.டி.எஸ் இணைப்பு திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வரையில் 65 சதவீதம் நிறைவடையப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் 15 நிமிடத்திற்குள் Bukit Chagar நிலையத்திலிருந்து Woodlands North station நிலையத்திற்கு பயணிகள் பயணிக்க முடியும் என்று நம்பப்படுவதாக முஹமாட் சாரிஃப் விளக்கினார்.
ஒரு மணி நேரத்திற்கு ஒவ்வொரு வழித்தடத்திலும் 10,000 பயணிகள் வரை இதில் பயணிக்கலாம் என்று முஹமாட் சாரிஃப் விவரித்தார்.








