கூச்சிங், பிப்ரவரி.18-
சரவாக், சாடோங் ஜெயா, சுங்கை பூலோ பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 30 வயது முஹமட் ஃபைஸால் அப்டில்லா இன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
அவரது உடல், தீயணைப்பு கட்டுப்பாட்டு மையத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் மதியம் 2.20 மணியளவில் மீனவர்களால் கண்டெடுக்கப்பட்டது.
சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், காணாமல் போனவரைத் தேடும் பணி இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கப்பட்டது. மீட்புக் குழுவினர் அவர் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் சுற்றளவில் தேடுதல் வேட்டையை நடத்தினர்.
"மீனவர்களால் கண்டெடுக்கப்பட்ட உடல் பின்னர் கட்டுப்பாட்டு மையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. உடல் முழுமையாக இருந்த போதிலும், அவரது வயிற்றுப் பகுதியில் முதலையின் பல் தடங்கள் மற்றும் கடித்த காயங்கள் காணப்பட்டன," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.








