முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் வழக்கறிஞரும், முன்னணி சட்ட வல்லுநருமான முஹமாட் ஷஃபீ அப்துல்லா, நிலுவையில் உள்ள வருமான வரி பாக்கியான 55 லட்சம் வெள்ளிக்கும் அதிகமான தொகையை உள்நாட்டு வருமான வரி வாரியத்திடம் செலுத்த வேண்டும் என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
ஷா அப்துல்லா, தனது வருமான வரியாக மொத்தம் 55 லட்சத்து 29 ஆயிரத்து 577 வெள்ளி 70 காசு செலுத்த வேண்டும் என்று வருமான வரி வாரியத்தின் முதிர்நிலை வழக்கறிஞர் நொர்ஹிஷாம் அஹ்மாட் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதித்துறை ஆணையர் ரொஸ் மாவார் ரொசாயின் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா, நாட்டின் முன்னணி வழக்கறிஞராக விளங்கிய போதிலும் கடந்த கடந்த 2011,2012, 2013, 2014 மற்றும் 2016 வரையில் தனது வருமானத்திற்கு வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்துள்ளார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








