வங்காளதேசத்தில் உள்ள மலேசியத் தூதரக அலுவலகத்தில் பணியாற்றி வரும் இரு உயர் நிலை அதிகரிகளுக்குச் சொந்தமானவை என்று நம்பப்படும் 31 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். முடக்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கணக்கு வைத்திருப்பதாக கூறப்படும் 20 வங்கிகளிலிருந்து இந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக பெர்னாமா தகவல்கள் கூறுகின்றன.
வங்காளதேசப் பிரஜைகள், மிக சுலபமான முறையில் நாட்டிற்குள் நுழைவதற்கான சட்டவிரோத நடவடிக்கைகளை கையாண்டு, அதன் மூலம் சொத்து குவிப்பு நடவடிக்கையில் ஈடபட்டதாக அந்த இரு அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த இரு அமலாக்க அதிகாரிகளையும் எஸ்.பி.ஆர்.எம். கைது செய்து விட்டதாக அதன் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


