வங்காளதேசத்தில் உள்ள மலேசியத் தூதரக அலுவலகத்தில் பணியாற்றி வரும் இரு உயர் நிலை அதிகரிகளுக்குச் சொந்தமானவை என்று நம்பப்படும் 31 லட்சம் வெள்ளி மதிப்புள்ள சொத்துகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். முடக்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கணக்கு வைத்திருப்பதாக கூறப்படும் 20 வங்கிகளிலிருந்து இந்த சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக பெர்னாமா தகவல்கள் கூறுகின்றன.
வங்காளதேசப் பிரஜைகள், மிக சுலபமான முறையில் நாட்டிற்குள் நுழைவதற்கான சட்டவிரோத நடவடிக்கைகளை கையாண்டு, அதன் மூலம் சொத்து குவிப்பு நடவடிக்கையில் ஈடபட்டதாக அந்த இரு அதிகாரிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த இரு அமலாக்க அதிகாரிகளையும் எஸ்.பி.ஆர்.எம். கைது செய்து விட்டதாக அதன் வட்டாரங்கள் தெரிவித்தன.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


