Mar 31, 2026
Thisaigal NewsYouTube
ஏழு பிரதானச் சாலைகள் மூடப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

ஏழு பிரதானச் சாலைகள் மூடப்படுகின்றன

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.26-

இன்றிரவு 2025 ஆம் ஆண்டுக்கான மலேசியக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிச் சுற்று, கோலாலம்பூர் புக்கிட் ஜாலீலில் நடைபெறுகிறது. இதனையொட்டி 7 பிரதானச் சாலைகள் தற்காலிகமாக மூடப்படும் என்று கோலாலம்பூர் போலீஸ் துறை அறிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரள்வார்கள் என்பதால் அந்த இறுதியாட்டம் சுமூகமாக நடைபெறுவதை உறுதிச் செய்வதற்கு 7 சாலைகள் மூடப்படுவதாக கோலாலம்பூர் போக்குவரத்து போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமட் ஸாம்ஸுரி முகமட் ஈசா தெரிவித்தார்.

சுகோம் சமிக்ஞை விளக்குப் பகுதியில் கெசாஸ் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, சுகோம் சமிக்ஞை விளக்குப் பகுதியிலிருந்து ஜாலான் மேரா சாகாரை நோக்கிச் செல்லும் சாலை, கெசாஸ் நெடுஞ்சாலையிலிருந்து ஜாலான் பாராட் வரை, ஜாலான் பாராட்/ ஜாலான் ராடின் உட்பட புக்கிட் ஜாலில் பகுதியில் 7 முதன்மைச் சாலைகள் மூடப்படவிருப்பதாக முகமட் ஸாம்ஸுரி குறிப்பிட்டார்.

மலேசியக் கிண்ணக் கால்பாந்தாட்டப் போட்டியின் இறுதி ஆட்டதில் ஜோகூர் ஜேடிடி அணியினர் ஸ்ரீ பகாங்கைச் சந்திக்கவிருக்கின்றனர்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை