கிள்ளான், நவ. 26-
கடந்த நவம்பர் 16 ஆம் தேதி சிலாங்கூர், கோலக்கிள்ளான், தாமான் கேமில் வயது குறைந்த பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு பெண்கள் உட்பட பதின்ம வயதுடைய 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த நவம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ஷா ஆலாம், செக்ஷன் 7, ஐ – சிட்டி மற்றும் பங்சார் மிட்வேலி மெகாமால் ஆகியவற்றில் அந்த ஏழு சந்தேகப்பேர்வழிகளும் கைது செய்யப்பட்டதாக தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர் சா ஹுங் ஃபோங் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த அன்று மாலை 4 மணியளவில் வெளியே சென்று வருவதாக கூறி சென்ற தங்களது 15 வயது மகள் வீடு திரும்பவில்லை என்று சம்பந்தப்பட்ட பெற்றோர் செய்து கொண்ட போலீஸ் புகாரைத் தொடர்ந்து அந்தப் பெண்ணை தேடும் பணி தொடங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








