தலைநகரில் அம்பாங் - ஶ்ரீ பெட்டாலிங் எல்.ஆர்.டி. ரயில் சேவைக்கான வழித்தடத்தில் 6 நிலையங்களை உள்ளடக்கிய ஒரு பகுதி, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்படவிருக்கிறது. பண்டாரா, சுல்தான் இஸ்மாயில், பிடபல்யுடிசி, திதிவங்சா, செந்தூல் மற்றும் செந்தூல் தீமூர் ஆகிய ரயில் நிலையங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் மூடப்படுகின்றன என்று LRT ரயில் சேவையை நிர்வகித்து வரும் ரேபிட் ரேய்ல் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆறு நிலையங்களில் எல்.ஆர்.டி. ரயில் சேவையின் செயல்பாடு, நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறை கூறுகளைத் தொடர்ந்து பூர்த்தி செய்வதாக இல்லை என்பதால் பாதுகாப்பு காரணமாக ஆறு நிலையங்கள் முடப்படுகின்றன என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


