கோலாலம்பூர், டிச. 18-
கடந்த ஜுன் மாதம், டீசலுக்கான இலக்குக்கு உரிய உதவித் தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டது மூலம் ஒட்டுமொத்த அளவில் 181 மில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தீபகற்ப மலேசியா எண்ணெய் நிலையங்களின் நடத்துநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இலக்குக்கு உரிய டீசல் உதவித் தொகை அறிமுகத்தினால் ஒவ்வொரு மாதமும் பெரும் இழப்பு ஏற்பட்டு வருவதாகவும் இதனால், தீபகற்ப மலேசியாவில் 3,500 எண்ணெய் நிலையங்கள் நடத்துநவர்கள் தற்போது பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர் என்று மலேசிய பூமிபுத்ரா எண்ணெய் நிலையங்கள் நடத்துநர்கள் சங்கத்தின் கெளரவ செயலாளர் ஹன்னி ஜுலியா மாமாட் தெரிவித்தார்.








