மாணவன் ஒருவனை பள்ளிக்கு அனுப்புவதற்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் போலீசார் விசாணை செய்யத் தொடங்கியுள்ளனர்.
பி.கே.பி. உத்தரவு காலத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில் நாசி கஞ்சாவை வாங்குவதற்கு கோலாலம்பூரிருந்து ஈப்போவிற்கு ஹெலிகாப்படர் பயன்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைப் போல ஷா ஆலாமில் உள்ள ஒரு காலி நிலப்பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டரில் பள்ளி சீருடை அ ணிந்திருந்த மாணவன் ஒருவன் இறங்கிய சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
ஒரு வீடமைப்புப்பகுதியில் உள்ள காலி நிலத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு எவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டது என்பது குறித்து மலேசிய வான்போக்குவரத்து இலாகாவிடம் போலீசார் புகார் அளிப்பர் என்று ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
அந்த மாணவன் ஹெலிகாப்படரில் இறங்கிய சம்பவத்தை அப்பகுதியில் வசித்த குடியிருப்புவாசி ஒருவர் தனது கைப்பேசியில் பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஹெலிகாப்படரில் இறங்கிய அந்த மாணவன் பின்னர் அருகில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்றதாக கூறப்படுகிறது. அந்த மாணவனை ஹெலிகாப்படர் தரையிறக்குவது இது இரண்டாவது முறையாகும் என்ற பெயர் குறிப்பிட விரும்பாத குடியிருப்பு வாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


