Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூரைப் போன்று மலாய்க்காரர்கள் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்களாம், மறைமுக மிரட்டல் விடுக்கிறார் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங்
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூரைப் போன்று மலாய்க்காரர்கள் அரசியல் அதிகாரத்தை இழந்து விடுவார்களாம், மறைமுக மிரட்டல் விடுக்கிறார் பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங்

Share:

கோல குபு பாரு, மே 10-

DAP- க்கு வழிவிட்டால் சிங்கப்பூரைப் போன்று மலாய்க்காரர்கள் தங்களின் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிடலாம் என்று இனத் துவேஷ தன்மையிலான மறைமுக மிரட்டலை பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங் விடுத்துள்ளார்.

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறும் நிலையில் அத்தொகுதிக்கு உட்பட்ட Batang Kali – யில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவாக தனது முதலாவது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அந்த மதவாத கட்சித் தலைவர் DAP-யை கடுமையாக சாடினார்.

சிங்கப்பூரில் மலாய்க்காரர்கள் அரசியல் அதிகாரத்தை இழந்ததைப் போன்ற வரலாற்றுத் தவறுகளை சிலாங்கூரில் உள்ள அம்னோ உறுப்பினர்களுக்கும், மலாய்க்காரர்களுக்கும் செய்து விடக்கூடாது என்று நினைவுறுத்தினார்.

மலேசியாவில் இன்று ஆளும் கட்சியில் இருக்கும் DAP, சிங்கப்பூரில் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் செயல் கட்சியான PAP- யிலிருந்து உருவானதாகும். நாட்டில் குழப்பங்களை விளைவிக்கும் அளவிற்கு அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு தீவிரவாதம் நிறைந்த கட்சியாகும்.

நாடு சுதந்திரம் பெற்றப் பின்னர் பூமிபுத்ராக்களுக்கான உரிமை அதிகாரத்துவ மொழியாக மலாய், பிற இனத்தவர்களுக்கு குடியுரிமை போன்ற கொள்கைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் இணக்கம் காணப்பட்டன.

ஆனால், சிங்கப்பூரில் லீ குவான் .இயூவினால் தோற்றுவிக்கப்பட்ட PAP- யின் மறுதோற்றமாக மலேசியாவில் DAP, என்று வேரூன்றியதோ, அன்று முதல் அவர்களின் பிரதான அரசியல் நோக்கம், சந்தடியின்றி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதாகும்.

இஸ்லாமியர்களின் அதிகாரத்தை அழிக்கும் நோக்கில் DAP காயை நகர்த்தி வருகிறது. அதற்கு வழிவிட்டால் சிங்கப்பூரில் மலாய்க்காரர்கள் அதிகாரத்தை இழந்ததைப் போல் மலேசியாவிலும் ஏற்பட்டு விடும் என்று ஹாடி அவாங் மறைமுக மிரட்டலை விடுத்துள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து