Jul 13, 2026
Thisaigal NewsYouTube
ரஷ்யாவில் எல்ப்ரஸ் மலையேற்றத்தின் போது மலேசியர் உயிரிழப்பு
தற்போதைய செய்திகள்

ரஷ்யாவில் எல்ப்ரஸ் மலையேற்றத்தின் போது மலேசியர் உயிரிழப்பு

Share:

ஐரோப்பாவின் மிக உயரமான மலையான ரஷ்யாவின் மவுண்ட் எல்ப்ரஸ் மலையில் ஏறும் முயற்சியின் போது, மலேசியர் ஒருவர் உயிரிழந்ததாக மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

இது குறித்து விஸ்மா புத்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளூர் சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட மலையேற்றப் பயணத்தில் பங்கேற்ற மூன்று மலேசியர்களில் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

தெற்கு ரஷ்யாவின் காகசஸ் மலைத்தொடரில் அமைந்துள்ள மவுண்ட் எல்ப்ரஸ், ஐரோப்பாவின் மிக உயரமான சிகரமாகவும், உலகின் புகழ்பெற்ற 'செவன் சமிட்ஸ்’ மலையேற்றப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முக்கிய மலையாகவும் விளங்குகிறது.

இந்நிலையில், உயிரிழந்த மலையேற்ற வீரர் தொடர்பான விவரங்களும், உயிரிழப்பிற்க்கான காரணமும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

Related News

மூன்று ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி / ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சையத் சாதிக் விடுதலை

மூன்று ஆண்டுகளாக நீடித்த சட்டப் போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி / ஊழல் வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் சையத் சாதிக் விடுதலை

மாலாக்காவில் வெள்ள  பாதிப்பு சீரடைந்தது: நிவாரண மையங்களில் 12 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மாலாக்காவில் வெள்ள பாதிப்பு சீரடைந்தது: நிவாரண மையங்களில் 12 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

மூன்று நாள் அரசுமுறைப் பயணம்: மலேசியா வந்தடைந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம்

மூன்று நாள் அரசுமுறைப் பயணம்: மலேசியா வந்தடைந்தார் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்தினம்

ஹோட்டல், வீடு, அழகு நிலையங்களில் மலிவு மருத்துவ சிகிச்சையா? – பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை

ஹோட்டல், வீடு, அழகு நிலையங்களில் மலிவு மருத்துவ சிகிச்சையா? – பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை

ஜோகூர் –சிங்கப்பூருக்கு இடையே விரைவுப் போக்குவரத்துத் திட்டம்: உட்லண்ட்ஸில் புதிய ஒருங்கிணைந்த மையம்

ஜோகூர் –சிங்கப்பூருக்கு இடையே விரைவுப் போக்குவரத்துத் திட்டம்: உட்லண்ட்ஸில் புதிய ஒருங்கிணைந்த மையம்

கூடுதல் வருமானத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கைது

கூடுதல் வருமானத்திற்காக விபச்சாரத்தில் ஈடுபட்ட சைபர்ஜெயா பல்கலைக்கழக மாணவி கைது