Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அம்புலன்ஸ் செல்வற்கு வழிவிடாமல் குறுக்கிட்ட ஐந்து மாணவர்கள் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

அம்புலன்ஸ் செல்வற்கு வழிவிடாமல் குறுக்கிட்ட ஐந்து மாணவர்கள் மீது குற்றச்சாட்டு

Share:

கோல கங்சார், அக்டோபர்.29-

சைரன் ஒலியுடன் அவசரமாகச் சென்று கொண்டிருந்த அம்புலன்ஸுக்கு வழிவிடாமல், மோட்டார் சைக்கிள்களில் சாலையை அடைத்துக் கொண்டு குறுக்கீடு செய்ததாக ஐந்து மாணவர்கள், கோல கங்சார் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

17 வயதுடைய அந்த ஐந்து மாணவர்களும் கடந்த அக்டேபார் 19 ஆம் தேதி பிற்பகல் 3.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 249 ஆவது கிலோமீட்டரில் கோல கங்சாருக்கு அருகில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டு சிறை அல்லது கூடியபட்சம் 15 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் அந்த ஐந்து மாணவர்களும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

அந்த ஐந்து மாணவர்களும் அம்புலன்சுக்கு வழிவிடாமல் மோட்டார் சைக்கிள்களை அபாயகரமாகச் செலுத்தியதாகக் கூறப்படும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை