Jan 19, 2026
Thisaigal NewsYouTube
நிறுவன பெண் இயக்குநர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

நிறுவன பெண் இயக்குநர் மீது குற்றச்சாட்டு

Share:

அந்நிய நாட்டு தொழிலாளர்களைத் தமது வீட்டில் சட்ட விரோதமாக தங்க வைத்து அடைக்கலம் வழங்கி வந்ததாக அந்நியத் தொழிலாளர் தருவிப்பு நிறுவனத்தின் பெண் இயக்குநர் ஒருவர் கோலாலம்பூர், மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

33 வயதான ரீத்தா ராமுடு என்ற அந்தப் பெண்,கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி கோலாலம்பூர், கூச்சாய், என்டர்பிரேனர் பார்க், ஜாலன் கூச்சாய் மாஜூ 13, கூச்சாய் எவேனியூ வில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஓர் இந்தியப் பிரஜையான முத்துமாலை ரெங்கசாமி, இந்தோனேசிய பிரஜையான மௌலிஸா ஆகியோரை தமது வீட்டில் சட்ட விரோதமாக தங்க வைத்ததாக ரீத்தா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும், தமக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து, அந்தப் பெண் இயக்குநர் விசாரணை கோரியுள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி

9 லட்சம் ரிங்கிட்  மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்

9 லட்சம் ரிங்கிட் மற்றும் கறுப்புப் பணப் பரிமாற்றம்: குடிநுழைவுத் துறை அதிகாரி, அவரது மனைவி மீது 60 குற்றச்சாட்டுகள்