அந்நிய நாட்டு தொழிலாளர்களைத் தமது வீட்டில் சட்ட விரோதமாக தங்க வைத்து அடைக்கலம் வழங்கி வந்ததாக அந்நியத் தொழிலாளர் தருவிப்பு நிறுவனத்தின் பெண் இயக்குநர் ஒருவர் கோலாலம்பூர், மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
33 வயதான ரீத்தா ராமுடு என்ற அந்தப் பெண்,கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி கோலாலம்பூர், கூச்சாய், என்டர்பிரேனர் பார்க், ஜாலன் கூச்சாய் மாஜூ 13, கூச்சாய் எவேனியூ வில் உள்ள ஓர் ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஓர் இந்தியப் பிரஜையான முத்துமாலை ரெங்கசாமி, இந்தோனேசிய பிரஜையான மௌலிஸா ஆகியோரை தமது வீட்டில் சட்ட விரோதமாக தங்க வைத்ததாக ரீத்தா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும், தமக்கு எதிராக குற்றச்சாட்டை மறுத்து, அந்தப் பெண் இயக்குநர் விசாரணை கோரியுள்ளார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


