ஊழல் குற்றங்களைத் தடுப்பது என்பது குற்றம் நிகழ்ந்த பின்னர் நடவடிக்கை எடுப்பதுடன் முடிந்துவிடக் கூடாது என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம்-ன் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான் வலியுறுத்தியுள்ளார்.
ஊழலைத் தடுப்பதில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் கல்விக்கும் தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், அதன் மூலமே ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை முழுமையாக முன்னெடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள், நடவடிக்கைகளில் உறுதியுடனும், முடிவுகளில் நியாயத்துடனும், அனைத்து சூழ்நிலைகளிலும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தனிப்பட்ட விருப்பங்கள், அழுத்தங்கள் அல்லது எந்தத் தரப்பினரின் செல்வாக்குக்கும் இடமளிக்காமல், தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, சரவாக் மாநில எஸ்.பி.ஆர்.எம்-ன் செயல்பாடுகள், மக்கள் கல்வி முயற்சிகள் மற்றும் நிர்வாகம் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து இன்று கூச்சிங்கில் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான்– னுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.








