அம்னோ முன்னாள் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன், தனது மனைவியுடன் இணைந்து, 9ஆவது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பையும் அவரது மனைவி டத்தின் ஸ்ரீ முஹைனி ஜைனால் அபிடினையும் இன்று வியாழக்கிழமை அவர்களது இல்லத்தில் சந்தித்துள்ளார்.
தமது ஃபேஸ்புக் பதிவில் இந்தச் சந்திப்பு குறித்து தெரிவித்த ஹிஷாமுடின், பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி விரைவில் குணமடைந்து, நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என பிரார்த்திப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, உடல்நலக் குறைவு காரணமாக இஸ்மாயில் சப்ரி தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை பெற்றிருந்தார்.
அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்புக்காக அவர் மீண்டும் அங்கு அனுமதிக்கப்பட்டதாகவும், இதயத் துடிப்பு சீராக்கி கருவி பொருத்துவது தொடர்பான சிகிச்சைக்கு அவர் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








