Jun 29, 2026
Thisaigal NewsYouTube
பண மோசடி வழக்கில் சிக்கியதாக நாடகம்! முன்னாள் மேலாளர் 241 ஆயிரம் ரிங்கிட் இழந்தார்!
தற்போதைய செய்திகள்

பண மோசடி வழக்கில் சிக்கியதாக நாடகம்! முன்னாள் மேலாளர் 241 ஆயிரம் ரிங்கிட் இழந்தார்!

Share:

குளுவாங், டிசம்பர்.14-

பண மோசடி வழக்கில் சிக்கியதாக அச்சுறுத்திய தொலைபேசி மோசடி கும்பலிடம் ஏமாந்து, முன்னாள் நிறுவன மேலாளர் ஒருவர் 241 ஆயிரம் ரிங்கிட் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று டிசம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை புகார் அளித்த 47 வயதுடைய பாதிக்கப்பட்டவர், கடந்த நவம்பர் 6ஆம் தேதியன்று தேசிய மோசடி பதிலளிப்பு மையத்திலிருந்து அழைப்பு வந்ததாக குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்துள்ளார்.

அவரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான தரப்பினர் ஈடுபட்டிருப்பதாகவும், அவர் பெயரில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மோசடி கும்பல் மிரட்டியுள்ளது. இதன் விளைவாக, நவம்பர் 18 முதல் 27 வரை, பாதிக்கப்பட்டவர் தனது பணத்தை ஏழு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பணத்தை மீட்க முடியாமல் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னரே, பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். இந்தக் குற்றச்சாட்டு தண்டனைச் சட்டம் பிரிவு 420-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Related News

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் தேர்தலில் இளம் வாக்காளர்கள் ஆதரவு யாருக்கு? வெற்றியைத் தீர்மானிக்கும் புதிய சக்தி என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

ஜோகூர் மாநிலத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நாளிலிருந்து 7 புகார்கள் – 3 வழக்குகள் பதிவு

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

சரவாக் சட்டமன்றத்தில் புதிய 17 தொகுதிகள்: நாடாளுமன்ற ஒப்புதலில் தாமதம் என ஜிபிஎஸ் தலைவர் விமர்சனம்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

தும்பாட்டில் அரிய வகை சிவப்புக் கழுகு உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனவிலங்குகள் பறிமுதல்

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

காஜாங்கில் பயங்கரம்: பயணப் பெட்டிக்குள் பெண்ணின் சடலம் மீட்பு

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்

ஷா ஆலமில் போலி விசா தயாரிக்கும் கும்பல் கைது - மூளையாக செயல்பட்ட இந்தியப் பிரஜை சிக்கினார்