May 6, 2026
Thisaigal NewsYouTube
பண மோசடி வழக்கில் சிக்கியதாக நாடகம்! முன்னாள் மேலாளர் 241 ஆயிரம் ரிங்கிட் இழந்தார்!
தற்போதைய செய்திகள்

பண மோசடி வழக்கில் சிக்கியதாக நாடகம்! முன்னாள் மேலாளர் 241 ஆயிரம் ரிங்கிட் இழந்தார்!

Share:

குளுவாங், டிசம்பர்.14-

பண மோசடி வழக்கில் சிக்கியதாக அச்சுறுத்திய தொலைபேசி மோசடி கும்பலிடம் ஏமாந்து, முன்னாள் நிறுவன மேலாளர் ஒருவர் 241 ஆயிரம் ரிங்கிட் இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று டிசம்பர் 13ஆம் தேதி சனிக்கிழமை புகார் அளித்த 47 வயதுடைய பாதிக்கப்பட்டவர், கடந்த நவம்பர் 6ஆம் தேதியன்று தேசிய மோசடி பதிலளிப்பு மையத்திலிருந்து அழைப்பு வந்ததாக குளுவாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி பாஹ்ரேன் முகமட் நோ தெரிவித்துள்ளார்.

அவரின் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்திச் சட்டவிரோதமான தரப்பினர் ஈடுபட்டிருப்பதாகவும், அவர் பெயரில் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மோசடி கும்பல் மிரட்டியுள்ளது. இதன் விளைவாக, நவம்பர் 18 முதல் 27 வரை, பாதிக்கப்பட்டவர் தனது பணத்தை ஏழு வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பணத்தை மீட்க முடியாமல் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னரே, பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். இந்தக் குற்றச்சாட்டு தண்டனைச் சட்டம் பிரிவு 420-இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்