Mar 29, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவ விசா மோசடி கும்பல்? குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை
தற்போதைய செய்திகள்

மருத்துவ விசா மோசடி கும்பல்? குடிநுழைவுத்துறை அதிகாரிகளிடம் விசாரணை

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 08-

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை முகப்பிடங்களில் செட்டிங் முறை வாயிலாக சோதனையின்றி அந்நியத்தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழையவிட்ட சம்பவம் தொடர்பில் 50 குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பிடிபட்டுள்ள வேளையில் தற்போது மருத்துவ விசா மோசடியிலும் சில அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

செட்டிங் முறை குறித்து அதிகமாக பேசப்பட்ட நிலையில் குடிநுழைவுத்துறையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, முழு வீச்சில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் அந்நிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவ விசா மோசடி கும்பல் சம்பந்தப்பட்ட விவகாரத்திலும் சில முக்கிய அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாக திடுகிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்துறை அமைச்சு மற்றும் குடிநுழைவுத்துறை ஆகியவற்றின் தகவல்களின்படி குடிநுழைவுத்துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள், மருத்துவ விசா மோசடி கும்பல் தொடர்பில் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையை அரசு அமலாக்க ஏஜென்சிகளை கண்காணித்து வரும் EAIC எனப்படும் நேர்மை ஆணையம் விசாரணை செய்து வருவதாக அந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி