பேராக்,ஜூலை 27-
தஞ்சோங் மாலிம், Sultan Idris கல்வியியல் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி Nur Farah Kartini- கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள Slim River போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர், நேற்று கோலகுபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்று போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்துள்ளார்.
26 வயதுடைய அந்த போலீஸ்காரருக்கு எதிராக பேரா மாநில போலீஸ் தலைவர் முன்வைத்துள்ள பரிந்துரையை புக்கிட் அமான் போலீஸ் நிலையம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.
Lans Koperal Muhammad Alif Monjani என்ற அந்த 26 வயது போலீஸ்காரர், தனது காதலி என்று நம்பப்படும் 25 வயது முன்னாள் பல்கலைக்கழக மாணவியை கொலை செய்து, சடலத்தை உலு பெர்ணம், SKC Kledang- கில் உள்ள செம்பனைத் தோட்டத்தில் வீசியதாக நேற்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மரணத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.








