நவ. 28-
பொது போக்குவரத்து சேவையை வழங்கி வரும் பிரதான நிறுவனமான Prasarana மலேசியா பெர்ஹாட்டின் இரண்டு முன்னாள் ஊழியர்கள் 5 லட்சம் ரிங்கிட்டிற்கும் அதிகமான தொகை தொடர்புடைய சட்டவிரோதப் பண மாற்றத்தில் ஈடுபட்டதாக கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
அந்த இரு முன்னாள் ஊழியர்களும் நீதிபதி Azrul Darus முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
Prasarana – வின் முன்னாள் குமாஸ்தாவான 39 வயது முகமட் ஹபிஸ் அஸிஸி என்பவர் நிறுவனத்திற்கு சொந்தமான வங்கி கணக்கை பயன்படுத்தி 5 லட்சத்து 65 ஆயிரம் ரிங்கிட்டை சட்டவிரோதமாக பணமாற்றம் மோசடியில் ஈடுபட்டதாக ஒன்பது குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
நிறுவனத்தின் முன்னள் நிதி அதிகாரியான முகமட் ஷாருல் நிஸாம் என்பர் 5 லட்சத்து 80 ஆயிரம் ரிங்கிட் மற்றும் 2 லட்சத்து 33 ஆயிரம் ரிங்கிட் சட்டவிரோத பண மாற்றம் தொடர்பாக எட்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.








