May 18, 2026
Thisaigal NewsYouTube
ஹெலிகாப்டர் விபத்து: போலீஸ் அதிகாரி தேவேந்திரன் நுரையீரல் கிருமியினால் பாதிப்பு
தற்போதைய செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்து: போலீஸ் அதிகாரி தேவேந்திரன் நுரையீரல் கிருமியினால் பாதிப்பு

Share:

ஜோகூர் பாரு, ஜூலை.11-

ஜோகூரில் நேற்று நிகழ்ந்த அரச மலேசிய போலீஸ் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய போலிஸ் அதிகாரி ஆர்.ஜி. தேவேந்திரன் நுரையீரல் கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் போலீஸ் அதிகாரி பாதிக்கப்பட்டதை அவரின் சகோதரர் ஆர்.ஜி. நவீந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஹெலிகாப்டருடன் கடலில் விழுந்த போது அவரின் உடலில் நீர் நுழைந்து, நுரையீரலைப் பாதித்து இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

தேவேந்திரன் இன்னமும் ஜோகூர் பாரு, சுல்தானா அமீனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாக்டீரியா தொற்று காரணமாக அவர் இன்னும் மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவர் தெரிவித்தாக அவரின் சகோதரர் நவீந்திரன் குறிப்பிட்டார்.

Related News