Jan 23, 2026
Thisaigal NewsYouTube
இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.23-

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை, இஸ்தானா நெகாரா அரண்மனையின் 2-ஆம் வாயிலில் உள்ள பாதுகாப்புத் தடுப்பில், கார் ஒன்று மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில், 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாலை 3.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, சம்பந்தப்பட்ட கார், வாயிலின் பாதுகாப்பு தூணிலும், அதன் தடுப்பிலும் மோதி விபத்திற்குள்ளானது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில், கார் ஓட்டுநருக்கோ அல்லது வேறு நபர்களுக்கோ, காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதை கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் முஹமட் ஸாம்ஸுரி முஹமட் இசா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், அந்தக் கார் ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட சுவாசப் பரிசோதனையில், அவரது இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவானது 100 மில்லியில் 166 மில்லிகிராம் என கண்டறியப்பட்டுள்ளது.

இது அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறிய அளவில் இருப்பதால், அந்த இளைஞர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக மேலும் இரண்டு புதிய பண மோசடிக் குற்றச்சாட்டுகள்: தான் குற்றமற்றவர் என வாதிட்டு விசாரணை கோரினார்

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக மேலும் இரண்டு புதிய பண மோசடிக் குற்றச்சாட்டுகள்: தான் குற்றமற்றவர் என வாதிட்டு விசாரணை கோரினார்