Jul 5, 2026
Thisaigal NewsYouTube
காரை எட்டி உதைத்து ஆபாச சைகையைக் காட்டிய நபர் கைது
தற்போதைய செய்திகள்

காரை எட்டி உதைத்து ஆபாச சைகையைக் காட்டிய நபர் கைது

Share:

இஸ்கண்டார் புத்ரி, ஜூலை.08-

ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் கார் ஒன்றை எட்டி உதைத்து, அதன் ஓட்டுநரை நோக்கி ஆபாச சைகையைக் காட்டிய நபரைப் போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கெலாங் பாத்தாவில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழியைப் போலீசார் அடையாளம் கண்டதாக இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. எம். குமரேசன் தெரிவித்தார்.

இரவு 8.37 மணியளவில் ஆடவர் ஒருவர் தனது காரை எட்டி உதைத்து ஆவேசமாக நடந்து கொண்டார் என்று 24 வயது நபரிடமிருந்து போலீஸ் புகாரும் பெறப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் அன்றைய தினமே அந்த சந்தேகப் பேர்வழி கைது செய்யப்பட்டதாக குமரேசன் தெரிவித்தார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது