பினாங்கு தீவின், மாநகர் மன்ற செயலாளர் டத்தோ எ.ராஜேந்திரன், அத்தீவின் புதிய மேயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடப்பு மேயர் டத்தோ இயூ துங் சியாங் கிடமிருந்து வரும் மே 5 ஆம் தேதி, 60 வயதான ராஜேந்திரன் அப்பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.
ராஜேந்திரன் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் பினாங்கு மாநகர் மன்றத்தின் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
பினாங்கு தீவு, நகராண்மைக் கழக அந்தஸ்தில் இருந்த போது 1985 ஆம் ஆண்டு அம்மன்றத்தில் இணைந்த ராஜேந்திரன், 35 ஆண்டுக் காலச் சேவைக்குப் பிறகு பணி ஓய்வு பெறும் இக்காலக்கட்டத்தில், அவரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டு மேயர் அந்தஸ்து வழங்கப்படுள்ளது.
மலேசிய வரலாற்றில், மேயர் பதவிக்கு அமரும் முதலாவது இந்தியர், ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


