Jul 30, 2026
Thisaigal NewsYouTube
மனித கடத்தலை முறியடிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

மனித கடத்தலை முறியடிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை

Share:

புத்ராஜெயா, ஜூலை 30-

நாட்டில் மனிதக் கடத்தல் நடவடிக்கையை முறியடிப்பதற்கு ஒருங்கிணைந்த முறையை உள்துறை அமைச்சு தொடங்கியுள்ளது என்று அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் அறிவித்துள்ளார்.

சிறார்களை இலக்காக கொண்டு மனிதக் கடத்தல் வாயிலாக மலேசியாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கையை முறியடிக்கும் நோக்கில் இது தொடங்கப்பட்டுள்ளதாக சைபுடின் குறிப்பிட்டார்.

வங்காளதேசத்தைச் சிறார்கள் மலேசியாவில் கட்டாயத் தொழிலாளர்களாக வேலை செய்வதற்கு கடத்தப்பட்டு வருவதாக கூறப்படும் சம்பவம், அடுத்த ஆண்டு அமெரிக்க சட்டத்துறையினரால் வெளியிடப்படவிக்கும் 2025 ஆம் ஆண்டு மனித கடத்தல் அறிக்கையில் எதிர்முறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் இதனை முறியடிப்பதற்கு எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான பரிந்துரைகளை மலேசியா இவ்வாண்டு பெற்று விட்டதால் இதன் மூலம் மனிதக் கடத்தலை முறியடிக்க முடியும் என்று சைபுடின் நம்பிக்கை தெரிவித்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை