வீடமைப்புப்பகுதிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோகூர், கோத்தா திங்கி, பெஙெராங், செபானா கோவ் என்ற வீடமைப்புப்பகுதிக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த ஆடவர் நுழைந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
புலன் விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த நபர் கோத்தா திங்கி, சுங்ஙை ரெங்கிட் என்ற இடத்தில் கைது செய்யப்ட்டுள்ளதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் ஹுசின் சமூரா தெரிவித்தார்.








