கோலகுபு பாரு , ஜூலை 04-
கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற டிஏபி- யை சேர்ந்த பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் பங்க சாக் தாவோ, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.
இன்று காலையில், ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மாநில சட்டமன்றக்கூட்டத்தில் சபா நாயகர் லாவ் வெங் சான் முன்னிலையில்சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றார் பங்க சாக் தாவோ பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார்.
பதவி உறுதி மொழி சடங்கிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய, பங்க சாக் தாவோ, தம் மீது நம்பிக்கை வைத்து ஒரு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்த கோலகுபு பாரு தொகுதி மக்களின் நல்வாழ்விற்கு பாடுபடப்போவதாக உறுதி அளித்தார்.
கடந்த மார்ச் 21 ஆம் தேதி கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹிரோங் காலமானதைத் தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில் பங்க சாக் தாவோ 3,869 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.








