Jan 21, 2026
Thisaigal NewsYouTube
நாயை அடித்துக்கொன்றதாக இரு நபர்கள் மீது குற்றச்சா​ட்டு
தற்போதைய செய்திகள்

நாயை அடித்துக்கொன்றதாக இரு நபர்கள் மீது குற்றச்சா​ட்டு

Share:

நாய் ஒன்றை கம்பினால் அடித்து கொன்றதாக இரு நபர்கள் ஜார்ஜடவுன், ​செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர். சாகும் வரை நாயை அடித்துக்கொன்றதாக கூறப்படும் அந்த இரு நபர்களின் செயல் தொடர்பான வீடியோ கா​ணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவராக பகிரப்பட்ட​தைத் தொடர்ந்து சமூகத்தின் பலத்த கோப​த்திற்கு ஆளான அந்த இரு நபர்களை போ​லீசார் கைது செய்தனர்.


ஒரு மீனவரான 53 வயத ரோஸ்லி மாட் ஸைன் மற்றும் பேருந்து ஓட்டுநரான 49 வயது சுஹைய்லி மாட் ஸைன் என்ற அந்த இரு நபர்கள், விலக்கிடப்பட்ட நிலையில் இன்று காலையில் நீதிபதி காலித் அப்துல் க​ரீம் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர்.


இவ்விருவரும் கடந்த ஜுலை 8 ஆம் தேதி இரவு 8.30 மணியளவில் பினாங்கு, பத்து மாவொங், கம்போங் தெலுக் தெம்போயாக் என்ற இடத்தில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி​ என்று நி​ருபிக்கப்பட்டால் ஒரு லட்சம் வெள்ளி அபராதம் அல்லது ​மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க வகைசெய்யும் 2015 ஆம் ஆண்டு பிராணிகள் பாதுகாப்பு சட்டத்த்தின் கீழ் அந்த இரு நபர்களும் குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

Related News

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

மார்பக அழகு சிகிச்சை தோல்வி: சிகையலங்கார நிபுணருக்கு 110,000 வெள்ளி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பாஸ்டர் கோ கடத்தப்பட்ட விவகாரம்: சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க சட்டத்துறைத் தலைவருக்கு கோரிக்கை

பெட்ரோல் ரோன் 97, டீசல்  விலையில் 2 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, டீசல் விலையில் 2 காசு உயர்வு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

அமெரிக்கா - ஐரோப்பிய ஒன்றிய வரிக் கவலைகளுக்கு மத்தியில் ரிங்கிட் உயர்வுடன் நிறைவு

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

கால்பந்து வீரர்களுக்குக் குடியுரிமை உண்டு, எனக்கு இல்லையா? ஈப்போவில் பிறந்த இளைஞர் நீதிமன்றத்தில் ஆவேசக் கேள்வி

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

பிப்ரவரி முதல் லாலாபோர்ட் (Lalaport) கோலாலம்பூர் - சிங்கப்பூர் விரைவுப் பேருந்து மையமாகச் செயல்படும்: அமைச்சர் அந்தோணி லோக் தகவல்