ஷா ஆலாம, நவ.11-
செயல்பாட்டில் இல்லாத முதலீட்டுத்திட்டத்தில் முதலீடு செய்த வணிகர் ஒருவர், 16 லட்சம் வெள்ளியை இழந்துள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.
56 வயதுடைய அந்த வணிகர் வீசாட் வாயிலாக தமது பெரும் பணத்தை இழந்துள்ளதாக போலீசில் புகார் செய்துள்ளார் என்று டத்தோ ஹுசேன் ஒமார் குறிப்பிட்டடார்.
மிக குறுகிய காலத்திலேயே அதிகமான லாபஈவு கிடைக்கும் என்ற நம்பக்கையில் செயல்பாட்டில் இல்லாத ஒரு முதலீட்டுத்திட்டத்தில் பணத்தை முன்பணமாக செலுத்தி பெரும் தொகையை அந்த வணிகர் இழந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.








