Jan 22, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.22-

தலைநகர் கோலாலம்பூரில் கைவிடப்பட்ட கட்டிடங்கள், குடிசைப் பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதிகள் சட்டவிரோதக் குடியேறிகளின் புகலிடங்களாகப் பயன்படுத்தப்படுவதை மலேசிய குடிவரவுத் துறை கண்டறிந்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட 131 அதிரடி சோதனைகளில், வங்காளதேசம், இந்தோனேசியா, மியான்மர், பாகிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 2,177 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் வான் முஹமட் சௌஃபி வான் யூசோஃப் தெரிவித்தார்.

இந்தச் சட்டவிரோதக் குடியிருப்புகள், பொதுவாகப் பாலங்களுக்கு அடியில், மலைச்சரிவுகள் மற்றும் புதர்களுக்குப் பின்னால் எனப் பொதுமக்களின் பார்வையில் படாதவாறு மறைவான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

முறையற்ற வகையில் நீர் மற்றும் மின்சார வசதிகளைக் கொண்டுள்ள இத்தகைய இடங்களை, அதிகாரிகளின் உளவுத் தகவல் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு குடிநுழைவுத் துறை தொடர்ந்து கண்டறிந்து சமரசமற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்

கூட்டரசு பிரதேச தினம் - தைப்பூசம் ஒரே நாளில்: அரசு ஊழியர்கள் அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையைப் பின்பற்ற கியூபெக்ஸ் அறிவுறுத்தல்

இராணுவத்தில் ‘யேயே’ (Yeye) கலாச்சாரம்: என் காலத்தில் நடந்திருந்தால் அறைந்திருப்பேன்! - முன்னாள் ஜெனரல் கிளிர் முகமது நோர் காட்டம்

இராணுவத்தில் ‘யேயே’ (Yeye) கலாச்சாரம்: என் காலத்தில் நடந்திருந்தால் அறைந்திருப்பேன்! - முன்னாள் ஜெனரல் கிளிர் முகமது நோர் காட்டம்