Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் காடுகள் மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் சட்டவிரோதக் குடியேறிகளின் ரகசியக் குடியிருப்புகள்: 2,177 பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.22-

தலைநகர் கோலாலம்பூரில் கைவிடப்பட்ட கட்டிடங்கள், குடிசைப் பகுதிகள் மற்றும் காட்டுப் பகுதிகள் சட்டவிரோதக் குடியேறிகளின் புகலிடங்களாகப் பயன்படுத்தப்படுவதை மலேசிய குடிவரவுத் துறை கண்டறிந்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் மேற்கொள்ளப்பட்ட 131 அதிரடி சோதனைகளில், வங்காளதேசம், இந்தோனேசியா, மியான்மர், பாகிஸ்தான் மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 2,177 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை இயக்குனர் வான் முஹமட் சௌஃபி வான் யூசோஃப் தெரிவித்தார்.

இந்தச் சட்டவிரோதக் குடியிருப்புகள், பொதுவாகப் பாலங்களுக்கு அடியில், மலைச்சரிவுகள் மற்றும் புதர்களுக்குப் பின்னால் எனப் பொதுமக்களின் பார்வையில் படாதவாறு மறைவான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

முறையற்ற வகையில் நீர் மற்றும் மின்சார வசதிகளைக் கொண்டுள்ள இத்தகைய இடங்களை, அதிகாரிகளின் உளவுத் தகவல் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்போடு குடிநுழைவுத் துறை தொடர்ந்து கண்டறிந்து சமரசமற்ற சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!