Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மெர்சிங் ஆற்றில் மாயமான மீனவர் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

மெர்சிங் ஆற்றில் மாயமான மீனவர் சடலமாக மீட்பு

Share:

மெர்சிங், டிசம்பர்.23-

கடந்த திங்கட்கிழமை சுங்கை லெங்கோர் ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மாயமானதாக அறிவிக்கப்பட்ட 36 வயது ஆடவர், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 12.49 மணியளவில், நீரில் மூழ்கிய நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டதாக மெர்சிங் தீயணைப்பு நிலையத் தலைவர் அப்துல் முயிஸ் முக்தார் தெரிவித்தார்.

தனது இரண்டு நண்பர்களுடன் மீன் பிடிக்கச் சென்ற போது, அவர்கள் பயணித்த படகு கவிழ்ந்ததையடுத்து, அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது.

என்றாலும், அந்த படகில் இருந்த மற்ற இருவர் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர்.

இந்நிலையில், மீட்கப்பட்ட சடலம் மேலதிக நடவடிக்கைகளுக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அப்துல் முயிஸ் முக்தார் குறிப்பிட்டார்.

இந்தத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில், மெர்சிங் தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த 13 வீரர்களோடு, மற்ற இலாக்காக்களைச் சேர்ந்த மொத்தம் 27 பேர் ஈடுபட்டனர்.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து