Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அம்பாங்கில் வீட்டிற்குப் பின்னால் கேட்ட புலியின் உறுமலால் மக்கள் அச்சம்!
தற்போதைய செய்திகள்

அம்பாங்கில் வீட்டிற்குப் பின்னால் கேட்ட புலியின் உறுமலால் மக்கள் அச்சம்!

Share:

அம்பாங், அக்டோபர்.13-

அம்பாங், யுகே பெர்டானாவில் அடுக்குமாடிக் குடியிருப்புகளுக்குப் பின்னால் உள்ள காட்டுப் பகுதியில், புலியின் உறுமல் சத்தம் கேட்டதால், அப்பகுதி மக்கள் அச்சத்திற்குள்ளாயினர்.

கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி, புலியின் உறுமல் குறித்து அப்பகுதி மக்களிடமிருந்து வந்த புகாரையடுத்து, தேசிய வனவிலங்குத்துறை அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தி வருவதாக அதன் இயக்குநர் டத்தோ அப்துல் காடீர் அபு ஹாஷிம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், இதுவரை புலியின் கழிவுகளோ, கால் தடங்களோ கிடைக்கவில்லை என்று கூறிய அப்துல் காடீர், சில மரங்களில் உள்ள நகக்கீறல்களின் அடிப்படையில் கண்காணிப்புப் பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Related News