கடந்த 90 ஆம் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும், ரிங்கிட்டின் சரிவுக்கும் காரணமான 230 கோடி வெள்ளி நிதி முறைகேட்டைப் புரிந்ததாக நம்பப்படும் முன்னாள் மூத்த அமைச்சரிடமும், டான்ஸ்ரீ அந்தஸ்தில் உள்ள ஒரு தொழில் அதிபரிடமும் மறுபடியும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்பதுடன் சில முக்கியமான ஆவணங்கள் கோரப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுடன் மிக நெருக்கமானவர்கள் என்றும், அவர் பிரதமராக இருந்த போது அவருடன் இணைந்த பணியாற்றியவர்கள் என்று நம்பப்படும் ஒரு பிரபல முன்னாள் அமைச்சரும், ஒரு தொழில் அதிபருடன் நாட்டின் வளங்களை சுரண்டி, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்து இருப்பது, அண்மையில் பண்டோரா பேபர்ஸ் அம்பலப்படுத்தியிருந்தது.
நாட்டின் நிதி அமைச்சுக்கு தலைமையேற்று இருந்த அந்த முன்னாள் அமைச்சர் மற்றும் தொழில் அதிபருக்கு எதிரான விசாரணைகளை எஸ்.பி.ஆர்.எம். துரிதப்படுத்தியுள்ள வேளையில் அவர்களுக்கு எதிராக எஸ்.பி.ஆர்.எம். பிடி இறுகி வருவதாக கூறப்படுகிறது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


