கடந்த 90 ஆம் ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கும், ரிங்கிட்டின் சரிவுக்கும் காரணமான 230 கோடி வெள்ளி நிதி முறைகேட்டைப் புரிந்ததாக நம்பப்படும் முன்னாள் மூத்த அமைச்சரிடமும், டான்ஸ்ரீ அந்தஸ்தில் உள்ள ஒரு தொழில் அதிபரிடமும் மறுபடியும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்பதுடன் சில முக்கியமான ஆவணங்கள் கோரப்படும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுடன் மிக நெருக்கமானவர்கள் என்றும், அவர் பிரதமராக இருந்த போது அவருடன் இணைந்த பணியாற்றியவர்கள் என்று நம்பப்படும் ஒரு பிரபல முன்னாள் அமைச்சரும், ஒரு தொழில் அதிபருடன் நாட்டின் வளங்களை சுரண்டி, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்து இருப்பது, அண்மையில் பண்டோரா பேபர்ஸ் அம்பலப்படுத்தியிருந்தது.
நாட்டின் நிதி அமைச்சுக்கு தலைமையேற்று இருந்த அந்த முன்னாள் அமைச்சர் மற்றும் தொழில் அதிபருக்கு எதிரான விசாரணைகளை எஸ்.பி.ஆர்.எம். துரிதப்படுத்தியுள்ள வேளையில் அவர்களுக்கு எதிராக எஸ்.பி.ஆர்.எம். பிடி இறுகி வருவதாக கூறப்படுகிறது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


