எம்.எச். 370 விமானம் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்தை ஒரு கேலிப்பொருளாக சித்தரித்து இருக்கும் சிங்கப்பூர் கலைஞர் ஜோஸ்லின் சியா வை மலேசிய வலைப்பதிவாளர்கள் கடுமையாக சாடியதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அரசாங்கம் அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளது.
அதே வேளையில், மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய வார்த்தைகளையும் செயலையும் சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்காது என்றும், அந்தக் கலைஞரின் வார்த்தைகள் அல்லது செயல்கள் எந்த வகையிலும் நாட்டின் கருத்துக்களை பிரதிபலிக்காது என்றும் மலேசியாவுக்கான சிங்கப்பூர் ஆணையர் வனு கோப்பால மேனன் தெரிவித்தார்.
மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான நட்புறவுக்கு கலங்கம் ஏற்படும் வகையில் அந்தப் பெண் கலைஞரின் செயல் இருந்ததனால், அவர் இனி சிங்கப்பூர் குடியுரிமை கொண்டிருக்க மாட்டார் என்று வனு கோப்பால மேனன் குறிப்பிட்டார்.
அத்துடன் சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் மேம்பாடு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக அந்த பெண் கலைஞர், 29 வினாடிகள் ஓடக்கூடிய டிக் டோக் கில் மிக ஏளனமாக பேசியிருப்பதையும் மலேசியர்கள் கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


