Jan 20, 2026
Thisaigal NewsYouTube
மன்னிப்பு கேட்டது சிங்கப்பூர் அரசாங்கம்
தற்போதைய செய்திகள்

மன்னிப்பு கேட்டது சிங்கப்பூர் அரசாங்கம்

Share:

எம்.எச். 370 விமானம் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவத்தை ஒரு கேலிப்பொருளாக சித்தரித்து இருக்கும் சிங்கப்பூர் கலைஞர் ஜோஸ்லின் சியா வை மலேசிய வலைப்பதிவாளர்கள் கடுமையாக சாடியதைத் தொடர்ந்து, சிங்கப்பூர் அரசாங்கம் அனைத்து மலேசியர்களிடமும் மன்னிப்புக் கோரியுள்ளது.

அதே வேளையில், மற்றவர்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய வார்த்தைகளையும் செயலையும் சிங்கப்பூர் அரசாங்கம் ஏற்காது என்றும், அந்தக் கலைஞரின் வார்த்தைகள் அல்லது செயல்கள் எந்த வகையிலும் நாட்டின் கருத்துக்களை பிரதிபலிக்காது என்றும் மலேசியாவுக்கான சிங்கப்பூர் ஆணையர் வனு கோப்பால மேனன் தெரிவித்தார்.

மலேசியா மற்றும் சிங்கப்பூருக்கு இடையிலான நட்புறவுக்கு கலங்கம் ஏற்படும் வகையில் அந்தப் பெண் கலைஞரின் செயல் இருந்ததனால், அவர் இனி சிங்கப்பூர் குடியுரிமை கொண்டிருக்க மாட்டார் என்று வனு கோப்பால மேனன் குறிப்பிட்டார்.

அத்துடன் சிங்கப்பூருடன் ஒப்பிடுகையில் மலேசியாவின் மேம்பாடு மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதாக அந்த பெண் கலைஞர், 29 வினாடிகள் ஓடக்கூடிய டிக் டோக் கில் மிக ஏளனமாக பேசியிருப்பதையும் மலேசியர்கள் கண்டித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்

2.5 பில்லியன் ரிங்கிட் பணமோசடி புகார்: விசாரணைக்கு அழைக்கப்பட்ட ஐஜேஎம் (IJM) நிறுவனத்தின் 2 உயர்மட்ட நிர்வாகிகள்

30,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகம்: போலீஸ்  அதிகாரி மற்றும் அவரது தம்பி 5 நாட்கள் தடுப்புக் காவல்

30,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாகச் சந்தேகம்: போலீஸ் அதிகாரி மற்றும் அவரது தம்பி 5 நாட்கள் தடுப்புக் காவல்