மலாய்க்கார் ஒருவர், நாட்டின் பிரதமராக வர முடியும் என்பது சாத்தியமே என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்துள்ளார். மலேசியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினாக இருக்கும் மலாய்க்கார்கள், மலாய்க்காரர் அல்லாத ஒருவர் பிரதமராக வருவதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பார்களேயானல் அது சாத்தியமே என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.
கூட்டரசு அரசமைப்புச் சட்டம் என்பது நாட்டின் உயர் பதவிக்கான தேவையை மட்டுமே வலியுறுத்துகிறது. ஆனால், இன அடிப்படையில் அந்த உயர் பதவியை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரால் மட்டுமே வகிக்க இயலும்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை பெறக்கூடிய ஒருவரை மாமன்னர் தமது சமயோசித முடிவுக்கு ஏற்ப பிரதமராக நியமிக்க முடியும் என்பதையே அரசமைப்புச் சட்டம் வலியுறுத்துகிறது என்று துன் மகாதீர் குறிப்பிட்டார்.








