நவம்பர்- 11
பினாங்கில் போலீசார் மேற்கொண்ட ஓர் அதிரடி சோதனையில் சுமார் 30 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருளை கைப்பற்றியுள்ளது.
ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டது மூலம் இந்த போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போதைப்பொருள் துடைத்தொழிப்புப்பிரிவு இயக்குநர் Datuk Seri Khaw Kok Chin தெரிவித்தார்.
இந்த சோதனை நடந்த வாரம் புதன்கிழமை இரவு 9.50 மணியளவில் Tanjung Bunga-வில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








