நாளை திங்கட்கிழமை, தொடங்க விருக்கும் 15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான இரண்டாவது அமர்வு கூட்டத்தொடரில் ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையும் அவசியமாகும் என்று பிரதமர் Dato Sri Anwar Ibrahim நினைவுறுத்தினார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரை குறித்த விளக்கமளிப்பும் அறிவுறுத்தல்களையும் ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு
பிரதமர் Anwar கூறியிருந்த நினைவுறுத்தலை பகிர்ந்து கொண்டு பேசுகையில் வெளியுறவு அமைச்சர் Datuk Seri Mohamad Hasan இதை
தெரிவித்தார்.
நாளை தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடர்பாக இன்று, Putrajaya, Seri Perdana - வில் முன் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டது.
ஒற்றுமை அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருகையும் அவசியம் என்பதுடன் எவரும் இந்த கூட்டத்தொடரை புறக்கணிக்க வேண்டாம் என்று Mohamad Hasan வலியுறுத்தினார்.
15 ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணைக்கான இரண்டாம் அமர்வு கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை முதல் ஜூலை 18 ஆம் தேதி வரையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








