Jun 6, 2026
Thisaigal NewsYouTube
1.1 பில்லியன் ரிங்கிட் முறைகேடு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார் ரபிசி ரம்லி
தற்போதைய செய்திகள்

1.1 பில்லியன் ரிங்கிட் முறைகேடு விசாரணை: எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்தார் ரபிசி ரம்லி

Share:

இங்கிலாந்தைச் சேர்ந்த ஆர்ம் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனத்துடன் தொடர்புடைய 1.1 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு விவகாரம் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக, பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி, இன்று எஸ்.பி.ஆர்.எம் தலைமையகத்தில் புதிய ஆதாரங்களைத் தாமாக முன்வந்து சமர்ப்பித்துள்ளார்.

இன்று காலை 9.50 மணியளவில் எஸ்.பி.ஆர்.எம் அலுவலகத்திற்கு வந்த ரபிசி, புதிய ஆதாரங்கள் தொடர்பான விளக்க அறிக்கைகளையும் வழங்குவதாக ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஒப்பந்தம் தொடர்பாக முன்பு வெளியான ஊடகச் செய்திகள் உள்ளிட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், விசாரணைக்கு உதவக்கூடிய மற்ற சாட்சிகள் இன்னும் அழைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ரபிசியிடம் கடந்த வாரம் தொடர்ந்து நான்கு நாட்களாக விசாரணை நடத்திய எஸ்.பி.ஆர்.எம் அதிகாரிகள், 131 பக்கங்களில் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு