கெடா, பேராக் ஆகிய மாநிலங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு மாநிலங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்கு கூடுதலான நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
பேராவில் மூன்று மாவட்டங்களில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 217 பேர் நிவாரண மைங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஹிலிர் பேராக், கிரியான், கிந்தா ஆகிய மூன்று மாவட்டங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.
கெடாவில் வெள்ளத்தினால் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோத்தா ஸ்டார் மாவட்டத்தில் இரண்டு நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக வெள்ள நிர்வாக மேலாண்மை வாரியம் அறிவித்துள்ளது.








