May 6, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கி முனையில் ஆல்பெர்ட் தே மிரட்டப்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை – சிலாங்கூர் போலீஸ்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கி முனையில் ஆல்பெர்ட் தே மிரட்டப்பட்டதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை – சிலாங்கூர் போலீஸ்

Share:

ஷா ஆலாம், டிசம்பர்.16-

அண்மையில், எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வர்த்தகர் ஆல்பெர்ட் தே, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் எந்த ஓர் ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 28 ஆம் தேதி, பூச்சோங்கில் உள்ள வீட்டில், வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட போது, எஸ்பிஆர்எம் அதிகாரி ஒருவர், அவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டியதாக அவரின் மனைவி லீ பெய் ரீ, சிப்பாங் போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்துள்ளார்.

இந்நிலையில், இக்குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், நிறைய சாட்சிகள் முன்வந்து சாட்சியம் அளித்ததாகவும், மொத்தம் எத்தனை பேர் சாட்சியம் அளித்தார்கள் என்பதை இப்போதைக்கு வெளியிட முடியாது என்றும் ஷாஸெலி கஹார் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளும், செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகளும் தடயவியல் பிரிவுக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

என்றாலும், எத்தனை சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன என்ற விவரத்தையும் வெளியிட ஷாஸெலி கஹார் மறுத்து விட்டார்.

இந்நிலையில், இதுவரையில், நடத்தப்பட்ட விசாரணையில் இக்குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஓர் ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதை ஷாஸெலி கஹார் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்