Aug 21, 2026
Thisaigal NewsYouTube
சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 12.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு பொருட்கள் பறிமுதல்
தற்போதைய செய்திகள்

சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 12.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பல்வேறு பொருட்கள் பறிமுதல்

Share:

கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர், கிள்ளான் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஒபி டாரிங் ஆல்ஃபா 2 மற்றும் ஒபி டாரிங் ஆல்ஃபா 5 நடவடிக்கை மூலம் , மொத்தம் ஐந்து பேர் கைது செய்யப்பட்டதுடன் 12.8 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு அரசாங்க மற்றும் அமலாக்கத் துறைகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட ஒபி டாரிங் ஆல்ஃபா 2 நடவடிக்கையில், சட்டவிரோதமாக சேமித்து விநியோகிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மதுபானங்கள் மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு, பானப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் மூவர் கைது செய்யப்பட்டதுடன், மொத்தம் 5.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதனிடையே, கிள்ளானில் மேற்கொள்ளப்பட்ட ஓப் தாரிங் ஆல்பா 5 நடவடிக்கையில் இரு உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுபானங்கள், வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள், தரநிலைகளைப் பூர்த்தி செய்யாத தலைக்கவசங்கள், தொலைபேசி உபகரணங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொன்சாய் தாவரங்கள் உள்ளிட்ட 7.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related News