மலாக்கா,ஆகஸ்ட் 08-
வட்டி முதலையிடம் கடன் பெற்றவர்களின் வீடுகளில் சிவப்பு சாயம் வீச்சு நடத்தியது, மற்றும் அவர்களின் உடமைகளை அடித்து நொறுக்கி, சேதப்படுத்தியது தொடர்பில் நால்வர், மலாக்கா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சட்டப்பட்டனர்.
18 வயது முஹம்மது அமீர் சுஹைமி,/ 43 வயது முஸ்முலியாடி சுஹைமி,/ 23 வயது புத்திரி நோவியானா /மற்றும் 23 வயது அஹ்மத் ஜமருல்ஹிஷாம் சுஹைமி / ஆகியோர் மாஜிஸ்திரேட் நபிலா நிஸான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
இந்த நால்வரில் அஹ்மத் ஜமருல்ஹிஷாம் என்பவர் மட்டுமே குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதர மூவர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினர்.
இந்த நால்வரும் கடந்த ஜுலை 11 ஆம் தேதி தாமன் லிம்பொங்கன் பெர்மாய், தாமன் புக்கிட் ரம்பாய், கம்போங் டெலோக் புக்கிட் கட்டில், தாமன் பந்தாய் எமா மற்றும் தாமன் தாசிக் உடமா ஆகிய வீடமைப்புப்பகுதிகளில் இக்குற்றங்களை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.








