May 1, 2026
Thisaigal NewsYouTube
கட்டாய மரணத் தண்டனையை அகற்றும்  சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

கட்டாய மரணத் தண்டனையை அகற்றும் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது

Share:

குற்றவாளிகளுக்குக் கட்டாய மரணத் தண்டனை விதிப்பதை ரத்து செய்யும் சட்டத்திருத்த மசோதா இன்று மக்களவையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மரணத் தண்டனைக்குப் பதிலாக கூடிய பட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுவதற்கு, நீதிபதிகளுக்கு இந்தச் சட்டத்திருத்த மசோதா விருப்புரிமையை வழங்குகிறது.
இந்தப் புதிய சட்டத்தின் வழி, தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்காக காத்திருக்கும் 1,318 கைதிகள் மரணத் தண்டனையிலிருந்து தப்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


முன்னதாக, இச்சட்டத்திருத்த மசோதா குறித்து மக்களவையில் பேசிய, சட்டத்துறைத் துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங், கடுங்குற்றங்களைப் புரியும் குற்றவாளிகளுக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பது என்பது இனி, நீதிபதிகளின் விவேகத்திற்கு உட்பட்டு முடிவுச் செய்யப்படும் என்றார்.

அதே வேளையில், குற்றவாளிகளுக்குக் கூடிய பட்சம் 40 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை விதிப்பதற்கு இச்சட்டத்திருத்தம், நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்குவதாக ராம் கர்ப்பால் விளக்கினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி