போர்ட்டிக்சன்,ஆகஸ்ட் 05-
போர்ட்டிக்சன், ஜிம்மா, முகிம் சுவா-வில் எண்ணெய் கசிவு சம்பவம் குறித்து நெகிரி செம்பிலான் மாநில சுற்றுச்சூழல் இலாகா புலன் விசாரணை செய்து வருவதாக மாநில தொழில்முனைவர்கள், மனித வளம், பருவநிலை மாற்றம், பயனீட்டாளர் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் S. வீரப்பன் தெரிவித்தார்.
அந்த எண்ணெய் கசிவின் மாதிரி, சேகரிக்கப்பட்டு, அதற்கான காரணத்தை கண்டறிய ரசாயன இலாகாவிற்கு அனுப்பட்டுள்ளதாக வீரப்பன் குறிப்பிட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை சுற்றுச் சூழல் இலாகா அதிகாரிகள், சுவா,முகிம் ஜும்மா, Lot. 3656 பகுதியில் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவ்விடத்தில் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாக e- புகார் வாயிலாக தகவல் கிடைத்து இருப்பதாக வீரப்பன் சுட்டிக்காட்டினார்.
சம்பந்தப்பட்ட பகுதியில் எண்ணெய் கசிவு, மிகக் கருப்பாக காரிள் வண்ணத்தில் காணப்பட்டதாக வீரப்பன் தெரிவித்தார்.








